search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி மது விற்றவர் கைது"

    அஞ்சுகிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அழகப்பபுரம் சந்திப்பில் வரும் போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓடினார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அந்த பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது37) என்பதும் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மயிலாடி சந்திப்பில் அனுமதியின்றி மது விற்றதாக நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×